உடுமலை
உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் வாசகர்கள் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு உடுமலை அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் மு.மணிகண்டராஜ் தலைமை வகித்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி வாசித்தார் நூலக வாசகர்கள்மற்றும் பொதுமக்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து பால்வினை நோய் மற்றும் காசநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து விளக்கினார். போட்டித்தேர்வு பயிற்சி ஆசிரியர் ஜெய் கணேஷ் நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார் நூலகர் கள் கணேசன் மகேந்திரன் அருள்மொழி மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.