பெரிய கோவில் குடமுழுக்கு: விழாக் கோலம் பூண்டுள்ள தஞ்சை
தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 


பார் போற்றும் கட்டிடக் கலை!



ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தலைமுறைகள் பல தாண்டியும் தமிழரின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது.



 


படையெடுக்கும் பக்தர் கூட்டம்!



23 ஆண்டுகளுக்குப் பின் இக்கோவிலின் குடமுழுக்கு விழா நாளை காலை (பிப்ரவரி 5) 9 மணியிலிருந்து 10 மணிக்குள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வைக் காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் தஞ்சையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.



 


பூஜைகள் தொடக்கம்!